‏ Psalms 29

தாவீதின் சங்கீதம்.

1பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;
அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
2யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.

3யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;
மகிமையின் இறைவன் முழங்குகிறார்;
பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
4யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;
யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
5யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;
யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
6அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,
சிரியோன்
அதாவது, எர்மோன் மலை
மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
7யெகோவாவினுடைய குரல்
மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
8யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;
காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
9யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.
காடுகளை அழித்து வெளியாக்குகிறது;
அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.

10யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;
யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.
Copyright information for TamTCV