‏ Isaiah 40:3-5

3ஒருவரின் குரல் கூப்பிடுகிறது:
“பாலைவனத்தில் யெகோவாவுக்கு
வழியை ஆயத்தப்படுத்துங்கள்;
வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு
பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.
4ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும்,
ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும்,
மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும்,
கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.
5யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்;
மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும்.
யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
Copyright information for TamTCV