‏ Psalms 95:7-11

7அவரே நம் இறைவன்;
நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும்
அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம்.

இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,
8“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும்,
பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும்,
உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
9அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்;
நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள்.
10நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்;
‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும்,
என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன்.
11எனவே கோபங்கொண்டு,
‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று,
ஆணையிட்டு அறிவித்தேன்.”
Copyright information for TamTCV